கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் புராதன சின்னமாக அறிவிக்கப்படவில்லை என்று அறநிலையத்துறை பதில் மனு அளித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது இந்து சமய அறநிலையத்துறை, ஒன்றிய தொல்லியல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி நந்தவனங்கள் அமைக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.