சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக் கூடாது என்ற தீட்சிதர்களின் அறிவிப்புக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னறிவிப்பின்றி வைக்கப்பட்ட பதாகையை அதிகாரிகள் அகற்ற முயன்றபோது, தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.