Saturday, May 11, 2024
Home » தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில், 3வது நபர் எப்படி வழக்கு தொடர முடியும்… உயர்நீதிமன்றம்

தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில், 3வது நபர் எப்படி வழக்கு தொடர முடியும்… உயர்நீதிமன்றம்

by Porselvi

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்தால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன விழாவை ஒட்டி கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என்று தீட்சிதர்கள் பதாகை வைத்தனர். அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்னை எழுந்தது. இந்நிலையில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022ம் ஆண்டு மே 17ம் தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கோயிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில் பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும். தமிழ்நாடு அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது.எனவே, அரசாணை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கங்காபூர்வாலா மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அதாவது, சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்தால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்?. உரிமை பாதிக்கப்பட்டு இருந்தால் நீதிமன்றத்தை நாடாமல் 3வது நபர் எப்படி வழக்கு தொடர முடியும்? வழக்கு தொடர நீங்கள் என்ன தீட்சிதரா?,”என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து எந்தவித இடைக்கால உத்தரவுகளையும் பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You may also like

Leave a Comment

nineteen − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi