சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் குழந்தைகளின் சிறார் திருமணங்கள் பற்றிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜ கோயில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு சிறார் திருமணங்கள் நடைபெற்று வருவதாக புகார் வந்தது. இதையடுத்து, குழந்தை திருமணங்கள் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.கடந்த இரு தினங்களுக்கு முன் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், சிதம்பரத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். முதலில் நடராஜர் கோயிலுக்குள் சென்று அங்கு தீட்சிதர்களிடம் குழந்தைகள் திருமணம் பற்றி விசாரணை செய்தார். பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று இந்த வழக்கு சம்பந்தமாக அறிக்கைகளை கேட்டிருந்தார். இந்த வழக்கு சம்பந்தமான சிறார்கள் வீடுகளுக்கு சென்று அங்கு விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், சிதம்பரம் தீட்சிதர் குழந்தைகளுக்கு சிறார் திருமனம் நடைபெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகள் திருமண புகைப்படம் வைரல்
previous post