கடலூர்: சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து சின்னவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் உயிரிழந்தனர். மீனவர்கள் மீனவசெல்வம் (45), தயாளமூர்த்தி (50) ஆகியோர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். மீன்பிடித்துவிட்டு திரும்பியபோது முகத்துவாரம் அருகே படகு தரை தட்டியதில் மீனவசெல்வம், தயாளமூர்த்தி கடலில் மூழ்கினர்.