கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் இளங்கலை உள்ளிட்ட 27 பாடப்பிரிவுகளை நடத்த மீண்டும் அனுமதி அளித்துள்ளது. அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் கதிரேசனின் முயற்சிக்கு பின் மத்திய அரசின் யுஜிசி அனுமதி கிடைத்தது. பல்கலை.யில் அனைத்து பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை நடத்தவும் அனுமதி வழங்கி யுஜிசி உத்தரவு அளித்துள்ளது.