டெல்லி: சத்தீஸ்கரில் மதுபான ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. வருமானவரிச் சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை ஆதாரமாகக் கொண்டு ED வழக்கு தொடர்ந்திருந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் குற்றப் பட்டியலில் இடம்பெறவில்லை எனக் கூறி ED வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.