Saturday, May 11, 2024
Home » குழித்துறை அருகே நள்ளிரவில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: போலீஸ் குவிப்பு

குழித்துறை அருகே நள்ளிரவில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: போலீஸ் குவிப்பு

by Ranjith
Published: Last Updated on

மார்த்தாண்டம்: குழித்துறை அருகே நள்ளிரவில் சத்ரபதி சிவாஜி சிலையை மர்ம கும்பல் சேதப்படுத்தியது. குமரி மாவட்டம், குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோயில் குளம் அருகே சத்ரபதி சிவாஜியின் 9 அடி உயர உருவ சிலை உள்ளது. சத்ரபதி சிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம கும்பல் சத்ரபதி சிவாஜி சிலையின் தலை பாகத்தை அடித்து உடைத்துள்ளது . நேற்று அதிகாலை இதுபற்றிய தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து கோயில் நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் என ஏராளமானோர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சேதமடைந்த சத்ரபதி சிவாஜி சிலையின் தலைப்பகுதியை போலீசார் துணியால் மூடினர். கோயில் தலைவர் நடராஜன் புகாரின்படி மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

13 + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi