சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பொதுமக்களை சேர்க்க சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் 7 வார்டுகளிலும் சிறப்பு முகாம் நடத்த சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்தார். அதனடிப்படையில் நடைபெற்ற இந்த முகாம்களில் பங்கேற்று, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பம் அளித்திருந்தனர். அவர்களில் ஆயிரத்து 716 பேருக்கு காப்பீட்டு அட்டைகள் அச்சிடப்பட்டன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் நேற்று மாலை நடைபெற்ற தனித்தனி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயனாளிகள் அனைவருக்கும் அந்த காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் சிற்றரசு, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் மதன்மோகன், மாநகராட்சி ஆளுங்கட்சி துணைத் தலைவர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஜெகதீசன், கமலா செழியன், மங்கை ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.ஹெச்.சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.