சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் கூறியிருப்பதாவது: 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சென்னையின் அதிகபட்ச மின் தேவை என்பது, கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 18ம் ேததியன்று 3,738 மெகாவாட் மட்டுமே. சென்னையில் கடந்த 17ம் தேதி மின்தேவை 4,044 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச தேவை கடந்த 16ம் தேதி 4016 மெகாவாட் ஆகும். 17ம் தேதி சென்னையில் மின்நுகர்வு 9.03 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன் கடந்த 16ம் தேதியன்று 9.02 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதுவே கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உச்சபட்சமாக வெறும் 6.64 கோடி யூனிட்களே பயன்படுத்தப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.