சென்னை: சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தையில் சிஐடியூ, அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi