சென்னை : IOC, மணலி, மணலி (நியூ டவுன்),மாத்தூர், சத்தியமூர்த்தி நகர் உள்பட வட சென்னை பகுதிக்கு செல்லும் பிரதான சாலைகளில் வெள்ள நீர் இன்னும் வடியாத சூழல் நிலவி வரும் நிலையில், மீட்பு பணிகளை துரிதப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்சாரம், தொலைத் தொடர்பு மற்றும் அத்தியாவசிய தேவைகள் சரி செய்யப்படாமல் இருப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.