Sunday, June 16, 2024
Home » பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ்?: சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை..!!

பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ்?: சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

சென்னை: சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்திருக்கின்றனர். பிரதமரை வரவேற்கும் பிரமுகர்களின் பட்டியலிலும் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் பெயர் இடம்பெற்றுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

ஓபிஎஸ் மட்டுமின்றி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் பிரதமரை வரவேற்கின்றனர். வரவேற்கும் குழுவில் இருப்போர் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் திருச்சிக்கு பிரதமர் வந்தபோதும் ஓ.பி.எஸ். அவரை வரவேற்று வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமரை வரவேற்கும் மூத்த அமைச்சர்கள்:

கேலோ விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க வரும் பிரதமரை வரவேற்க, அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்களும் பட்டியலில் வழக்கம் போல் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் மோடியை அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு வரவேற்கின்றனர். திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் பிரதமர் மோடியை வரவேற்கின்றனர். பிரதமரை வரவேற்க விமான நிலையத்தில் அரசியல் கட்சியினர் திரண்டு வருகின்றனர்.

இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு பிரதமர் செல்கிறார். அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார். சிவானந்தா சாலை, பல்லவன் இல்லம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

two + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi