சென்னை : சென்னை பாரிமுனை அருகே ஒன்றிய அரசின் சென்னை போர்ட் டிரஸ்ட் நிர்வாகம், ரூ.12 கோடி வரிபாக்கி வைத்துள்ளது. ரூ.10.3 கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அலுவலக முகப்பில் நோட்டீஸ் ஒட்டினர். ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்தாததால் மாநகராட்சி இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.