சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இளஞ்சிவப்பு, ஊதா நிற பஞ்சு மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ‘ரொடமின் பி’ எனும் வேதிப்பொருள் கலந்துள்ளதா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பல்லாவரத்தில் இந்த பஞ்சு மிட்டாய் உற்பத்தி செய்யும் ஆலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இவ்வகை பஞ்சு மிட்டாய்களை தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு செய்யவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.