சென்னை: சென்னை மதுரவாயல் அருகே தாக்குதலில் கார் ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை காவலர் ரிஸ்வான் கைது செய்யப்பட்டார். தலைமை காவலர் ரிஸ்வான் தாக்கியதால் கார் ஓட்டுநர் ராஜ்குமார் இறந்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கார் ஓட்டுநர் ராஜ்குமார் உயிரிழப்பு தொடர்பாக உயர் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை நடத்திய நிலையில் தலைமை காவலர் கைது செய்யப்பட்டார்.