சென்னை: சென்னை எம்.கே.பி. நகரில் வழக்கறிஞர் பிருத்விராஜ் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ரவுடிக்கு போலீஸ் வலைவீசியுள்ளார். வழக்கறிஞர் பிருத்விராஜ் கார் மீது மோதி தகராறில் ஈடுபட்டு தனது சகோதரரான ரவுடி ஆகாஷை அபிஷேக் அழைத்துள்ளார். ரவுடி ஆகாஷ் தனது கூட்டாளிகளுடன் வந்து வழக்கறிஞர் பிருத்விராஜை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். வழக்கறிஞர் பிருத்விராஜ் அளித்த புகாரில் ரவுடி ஆகாஷின் கூட்டாளி சந்தோஷை போலீசார் கைது செய்தனர்.