சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ், வி.சி.க., மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆ.ராசா பங்கேற்றுள்ளனர்.