சென்னை : கேரள மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த
சாகுல்ஹமீது சிராஜூதீன் (35) சென்னையில் கைதாகி உள்ளார். சென்னையில் இருந்து மலேசியா தப்ப முயன்றபோது குடியுரிமை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.