மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய புதிய இயக்குனராக, டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையராகத்தில், நிதித்துறை பொது மேலாளராக இருந்த சி.வி.தீபக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில், துணை பொது மேலாளர் பொறுப்பில் இருந்தவர். பதவி உயர்வு பெற்று, டெல்லி தலைமையகத்தில், நிதித்துறை பொது மேலாளராக பதவியில் இருந்தார். தற்போது, சென்னை விமான நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலைய இயக்குனராக இருந்த சரத்குமார், கடந்த ஏப்ரல் மாத இறுதியில், திடீரென டெல்லியில் உள்ள, தலைமை இடத்துக்கு மாற்றப்பட்டார். சென்னை விமான நிலைய பொது மேலாளரான எஸ்.எஸ்.ராஜு, கூடுதல் பொறுப்பாக, அந்த பதவியை கவனித்து வந்தார். இந்நிலையில் தற்போது புதிய இயக்குனராக சி.வி.தீபக் நியமிக்கப்பட்டுள்ளார்.