சென்னை: கூட்டணி கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ், வி.சி.க., மதிமுக உடன் தொகுதிப் பங்கீடு இறுதியாகவுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.