சென்னை: சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் பொன்முடியுடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, ரகுபதி உள்ளிட்டோர் சந்தித்தனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, சி.வி.கணேசன், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, பொன்முடியுடன் சந்தித்துள்ளனர். நேற்று அமைச்சர் பொன்முடியுடன் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அமலாக்கத்துறை வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள நேரில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆலோசனை வழங்கினார். இக்கட்டான தருணத்தில் நாங்கள் துணை நிற்போம் என்று பொன்முடிக்கு அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.