சென்னை: சென்னை பூக்கடை என்.எல்.சி. போஸ் சாலையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. டி.பி. கோல்டு, பார்ஸ்வி ஆகிய நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மோகன்லால் என்ற நகை வியாபாரிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய கடைகளில் சோதனை நடைபெற்றது. க
டந்த 2020ம் ஆண்டு அங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர்.3 நாட்களாக விடிய விடிய நடைபெற்ற அதிரடி சோதனையில் ரூ.500கோடி வருமானம் கணக்கில் காட்டப்படாதது தெரியவந்தது. வங்கிகளில் வைக்கப்படும் நகைகளை வாங்கி அதிலிருந்து மாறுதலாக நகைகளை மாற்றி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வரும் இடத்திலிருக்கும் பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனை முடிவுற்ற நிலையில், பணப்பரிமாற்றம், நகை வாங்கியது, விற்றது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.