Friday, May 10, 2024
Home » சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமானத்திற்கான தடை நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமானத்திற்கான தடை நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

by Nithya

சென்னை: சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமானத்திற்கான தடையை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ளது பிரபல எம்.ஜி.எம். மருத்துவமனை. இந்த மருத்துவமனை புதிதாக ஒரு கிளை மருத்துவமனையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் பீட்டர் சாலையில் 10 மாடி கட்டிடத்தை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் கட்டுமான பணிகளையும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனை, ஆழ்வார்பேட்டையில் உள்ள சாலையில் புதிதாக 10 மாடி மருத்துவமனை கட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மருத்துவமனை கட்டுமான அஸ்திவார பணியின்போது சுற்றுப்புறப் பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் பெரும்பாலாக மூத்த குடிமக்கள் வசித்து வருவதாகவும், பள்ளி மற்றும் பல்வேறு குடியிருப்புகள் இருப்பதனால் கட்டுமான பணிகளின் ஒலியால் அனைவருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன், நீதிபதி சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமான வழக்கில் தடை நீட்டிக்கப்பட்டு சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது, ஏற்படும் ஒலி மாசுவை கண்காணிக்க நடைமுறை உள்ளதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திட்ட அனுமதியின்றி கட்டுமான பணிகளுக்கு எப்படி அனுமதி தரப்பட்டது என்று சிஎம்டிஏ-வுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

seventeen − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi