சென்னை: சென்னை திருவான்மியூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சாக்லேட் தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான யோவான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஜன.29ல் புகாரளிக்கப்பட்டு பிப்.1ல் கைதான யோவான் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.