சென்னை: சிந்தாதரிப்பேட்டை மீன் சந்தையில் முறையாக முத்திரை பதிவு செய்யாத எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யபட்டது. தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுமார் 60 எடை கருவிகள் முத்திரை இல்லாமல் சான்றுகள் வாங்காமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.