சென்னை: சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.16 கோடி வங்கிக்கடன் பெற்று மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது செஇயபட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட ராஜேஸ்வரி மற்றும் ஜெகநாதன் – முத்துலட்சுமி தம்பதியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 2018-ல் பெருங்களத்தூரில் 2 வீடுகளை வாங்க ஃபிரேம்ஒர்க் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன இயக்குனர் முத்துலட்சுமி, எஸ்.பி.ஐ.யில் கடன் பெற்றார். திட்ட அனுமதி உள்ளதாக வங்கியில் போலியான ஆவணங்களை கொடுத்து முத்துலட்சுமி மோசடி செய்துள்ளார்.