சென்னை: சென்னை எண்ணூரில் உள்ள கொசஸ்தலை ஆறு மீண்டும் மஞ்சள் நிறமாக மாறியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆற்றில் ரசாயனம் கலந்த நீரால் மஞ்சள் நிறமாக கொசஸ்தலை ஆறு காட்சியளிக்கிறது. ஏற்கனவே ஆற்றில் எண்ணெய் படலம் கலந்து அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் ஆறு நிறம் மாறியதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.