சென்னை: சென்னை பெருநகர காவல்துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ட்ரோன் காவல் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். ரூ.3.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்பிரிவு போக்குவரத்து நெரிசலை கண்டறிந்து உடனே சரிசெய்ய, திருவிழா போன்ற கூட்டம் நிறைந்த இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்வது போன்ற பல பணிகளை மேற்கொள்ள உள்ளது.