சென்னை: சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த பெண் மருத்துவர் பிரியதர்ஷினியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.52 லட்சம் திருட்டு போனது. ஐசிஐசிஐ வங்கியில் பேசுவதாக கூறி ஓடிபி உள்ளிட்ட விவரங்களை பெற்று மோசடி கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. பெண் மருத்துவர் அளித்த புகாரை அடுத்து அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.