சென்னை: சென்னை அறுப்பாக்கம் பகுதியில் தானிய பாக்கெட் செய்து தந்தால் பணம் தருவதாக மோசடி செய்த புகாரில் தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோகா எக்ஸ்போர்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி பணம் வசூலித்து மோசடி செய்த மகாதேவ பிரசாத், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மகாதேவ பிரசாத் வெளியிட்ட விளம்பரத்தை பலரும் நம்பி முன்பணமாக ரூ.25,000 செலுத்தியுள்ளனர்.