செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாத்தூர் செட்டிமேட்டில் 5000 ஆண்டு பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 நாட்களாக சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வில் கிடைக்கப் பெற்ற குழந்தை எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ய சௌந்தரராஜன் முடிவு செய்துள்ளார். குழந்தை எலும்புக்கூடு கீழடியை காட்டிலும் பழமை வாய்ந்தது என தொல்லியல் துறை பேராசிரியர் தகவல் தெரிவித்துள்ளார்.