சென்னை : சென்னையில் CMDA அதிகாரிகளுடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகளுடன் ஆம்னி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்து இயக்க வேண்டும் என அரசு உத்தரவை எதிர்த்து ஆம்னி உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணையின் போது அதிகாரிகளுடன் பேசி தீர்வு எட்டும்படி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.