சென்னை : 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 23.45 அடியாக உயர்ந்திருந்தது. 2015ம் ஆண்டுக்கு பிறகு நீர்மட்டம் 23 அடியை தாண்டி இருப்பது இதுவே முதல்முறையாகும். திங்கள்கிழமை கொட்டித் தீர்த்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததே நீர்மட்டம் 23 அடியை தாண்ட காரணமாகும்.