விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 6 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி கோயிலில் வரும் 16ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ள நிலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வரும் 12முதல்17ஆம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதித்துள்ளது.