ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 அடுத்த கட்டத்திற்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டங்களை ஏற்கெனவே வெற்றிகரமாக கடந்த நிலையில் 3வது கட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு அறிவித்துள்ளது. அடுத்தக் கட்ட உந்துதல் வரும் 20 ஆம் தேதி மேற்கொள்ளப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.