ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன் – 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், ஆகஸ்ட் 23ல் மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்குகிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரை நிலவில் தறியிறக்குவதற்கான நடவடிக்கை 23ம் தேதி மாலை 5.27 மணியளவில் தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான நடவடிக்கை நடைபெறும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.