திருமலை: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.எம்.எல்.ஏ சந்திரபாபு முன்னிலையில் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தனர். ஆந்திர மாநிலத்தில், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. வேமி பிரபாகர், அவரது மனைவியும் டெல்லி திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழு முன்னாள் தலைவருமான வேமி பிரசாந்தி ஆகியோரும், மயிலவரம் தொகுதி எம்.எல்.ஏ வசந்த கிருஷ்ணாவும் சந்திரபாபு முன்னிலையில் நேற்று தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர்.