மதுரை: நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்தவர் முரசொலி மாறன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை சிலைமானில் மரியாதைக்குரிய முரசொலி மாறனின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.