சென்னை: சிபிஎஸ்இ-க்கு சாதகமான சம வாய்ப்பற்ற நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் தேர்வு, ஏழை மாணவர்களால் எட்டிப்பிடிக்க முடியாதது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. 39 சாதனை மாணவர்களில் ஒருவர் கூட மாநில பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்கள் கிடையாது. சாதனை மாணவர்கள் 39 பேரில் 38 பேர் நீட் தேர்வுக்கான சிறப்புப்பயிற்சி பெற்றவர்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.