ஹைட்ரபாத்: சிபிஐயால் கைது செய்யப்பட்ட கே.சி.ஆர். மகள் கவிதாவுக்கு ஏப்ரல் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைதாகி சிறையில் உள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.