பெங்களூரு: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் திறப்பு உத்தரவை கண்டித்து நாளை கர்நாடகா முழுவதும் பந்த் நடைபெறவுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. கன்னட அமைப்புகள் நாளை மாநிலம் தழுவிய பந்த்துக்கு அறிவிப்பு விடுத்துள்ளன.