பெங்களூரு : கர்நாடகா ஒரு வாரத்தில் 3.9 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. 15 நாட்களுக்கு 6.48 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ஆனால் 3.9 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்து இருப்பதாக தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.