டெல்லி: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார். நாளை மறுநாள் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் நாளையே கூடுகிறது என்று காவிரி ஒழுங்காற்று குழு தெரிவித்துள்ளது. காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.