கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்ஜித், அபிஜித் மற்றும் நண்பர்கள் என 4 பேர் சேர்ந்து வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி, பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரியை முடித்துவிட்டு மாணவர்கள் தங்களது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தனர்.
அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், மாணவர்களின் வீட்டுக் கதவை தட்டியுள்ளது. கதவு திறக்கப்பட்டவுடன் உள்ளே சென்று மாணவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு, அவர்கள் வைத்திருந்த பணம் மற்றும் விலை உயர்ந்த 4 செல்போன்களை அந்த கும்பல் பறித்துச் சென்றது. இதில் மாணவர்கள் அவர்களை விரட்டிச் சென்றுள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தப்பியோடியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.