சென்னை : காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.சண்முகபுரத்தில் உள்ள கோல்டன் மார்பில் உரிமையாளர் பிரேம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அண்ணா நகர் (மேற்கு) பகுதியில் உள்ள சிண்டிகேட் பேங்க் காலனியில் உள்ள கட்டுமான தொழிலதிபர் கமலாக்கர் என்பவர் வீட்டிலும் அமைந்தகரை செனாய் நகர் பகுதியில் ஈஸ்ட் பார்க் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.