பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பான் நட்சத்திரம் அகானே யாமகுச்சியுடன் நேற்று மோதிய கரோலினா மரின், கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 26-24 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட யாமகுச்சி 2வது செட்டில் 1-10 என பின்தங்கிய நிலையில் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, 2வது முறையாக ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கரோலினா மரின் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். முன்னதாக 2015ல் அவர் இந்த தொடரில் பட்டம் வென்றிருந்தார்.