சென்னை: வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி.. மக்கள் மனதில் வாழ்வது விஜயகாந்த் போன்றோரே என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒரு முறை பழகினால் விஜயகாந்த்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். விஜயகாந்த் கோபத்துக்கு பின்னால் நியாயமான ஒரு காரணம் இருக்கும். விஜயகாந்த் தைரியத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமானவர். விஜயகாந்த் நட்புக்கு இலக்கணமானவர், சுயநலமில்லாதவர் என்று தெரிவித்தார்.