Tuesday, December 5, 2023
Home » கனடாவில் பயங்கரம் சீக்கியர்,11 வயது மகன் பட்டப்பகலில் சுட்டுக்கொலை

கனடாவில் பயங்கரம் சீக்கியர்,11 வயது மகன் பட்டப்பகலில் சுட்டுக்கொலை

by Arun Kumar

ஒட்டாவா: கனடாவில் சீக்கியரும், அவரது 11 வயது மகனும் பட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்டனர். கனடாவில் உள்ள எட்மன்டன் நகரில் வசித்து வந்தவர் ஹர்ப்ரீத் சிங் உப்பால்(41). நேற்றுமுன்தினம் ஹர்பிரீத் சிங் மற்றும் அவரது 11 வயது மகன் காஸ் நிலையத்துக்கு வெளியே காரில் அமர்ந்திருந்தனர். அப்போது, அவரது காரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் காரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதில் ஹர்பிரீத் சிங், அவரது 11 வயது மகன் கொல்லப்பட்டனர். பின்சீட்டில் அமர்ந்திருந்த ஹர்பிரீத்சிங் மகனின் நண்பன் காயம் எதுவுமின்றி தப்பினான். ரவுடி கும்பல்களுக்கு இடையயோன மோதலின் விளைவாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றி எட்மன்டன் போலீஸ் அதிகாரி கூறுகையில்,‘‘ சுட்டு கொல்லப்பட்ட ஹர்பிரீத்சிங் எட்மன்டன் நகரில் குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர். அவரை சுட்டு கொன்றவர் யார் என்பது தெரியவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை’’ என்றார். போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ ரவுடி கோஷ்டிகள் இடையேயான மோதலில் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 3நாட்களுக்கு முன் பரம்வீர் சாகில் என்ற ரவுடி சுட்டு கொல்லப்பட்டார். அந்த கொலைக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது’’ என்று தெரிவித்து உள்ளன.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?