சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில் 3 நாட்கள் ‘பேக்கரி பொருட்கள் தயாரித்தல்’ பயிற்சி வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் பயிற்சியில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பது பற்றி கற்றுத்தரப்படும். ஆர்வமுள்ள தொழில்முனைவோர் 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரம் பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.